Sri Ramana Sannadhi Murai(Tamil)

Rs.30/-

Language Tamil.ஸ்ரீ ரமண சந்நிதிமுறை என்னும் இப் பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவர் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் ஸ்ரீ ரமண பகவான். திருஞான சம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய,

"நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சிந்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்"

என்னுந் திருவாக்குக்கு இலக்கியமாய், சச்சிதானந்தமாய், பரமாத்ம சொரூபமாய், ஈசனாய் விளங்குகின்றார் பகவான்.

"புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க"

என மணிவாசகப் பெருமான் தம்மை ஆண்டவரை நினைந்துருகி அந்நாள் எவ்வண்ணம் திருவாசகம் என்னும் தேனை வெளியிட்டருளினரோ அவ்வாறே, இந் நூலாசிரியராகிய ஸ்ரீ முருகனார் பகவானது திருக்கண்ணோக்கம் பெற்று அவரருளால் நெஞ்சிற் செஞ்சோல் ஊற்றெழ அவரது அருள், அருமை, பெருமை, எளிமை, உண்மை, இயல், செயல் முதலிய சகல குணங்களையும் அன்பெனும் ஆறு கரையது புரள, ஆர்வமொழிகொடு அவர் திருவடிக்கே அணிந்த புத்தமுதப் பாமாலை ஆகும் இந்நூல்.

பக்கங்கள் 508

Add to Cart:

Copyright © 2013 Ramana Ashram Bookstall. Powered by Zen Cart - Design by AFZ Design